கர்ப்பிணி மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்!

தமிழகத்தில் போதைக்கு அடிமையான கணவன் ஒருவர், தன்னுடைய மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.ஆர் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயமணி. இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இவருக்கு ஏற்கனவே 1 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது ஜெயமணியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் ஜெயமணி, போதைக்கு அடிமையாவதற்காக தன்னையே நண்பர்களுக்கு விருந்தாக்கினார் என அதிர்ச்சிகர புகாரை தெரிவித்துள்ளார்.

அதாவது, தான் 5 மாதம் கர்ப்பமாக இருந்த போது, சத்து மாத்திரை என்று மயக்க மாத்திரையை கொடுத்து தன்னை மயங்க வைத்ததாகவும் அரை மயக்கத்தில் இருந்த போது , கணவரே அவரது கூட்டாளி சுந்தரமூர்த்தியை அழைத்து வந்தது, தன்னை பலாத்காரம் செய்ய வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர், மணிகண்டன் என்பவரை அழைத்து வந்து அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை வெளியில் சொன்னால் குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கணவர் ஜெயமணி மிரட்டி வந்ததாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தற்போது மீண்டும் மீண்டும் இதே தவறை கணவன் செய்து வருவதால் தன்னையும் , குழந்தையையும் காப்பாற்றும்படி கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெயமணி மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.